Saturday, December 11, 2021

சுரண்டை அருகே உள்ள லெட்சுமி புரம் வீடு கட்டிய கடனை கொடுக்க முடியாததால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை - Farmer suicide at surandai in tirunelveli

 சுரண்டை அருகே உள்ள லெட்சுமி புரம் கிராமத்தை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (வயது 52). விவசாய தொழிலாளி. இவர் கடன் வாங்கி வீடு கட்டினார். ஆனால் அதற்குரிய கடனை ஒழுங்காக கட்ட முடியவில்லை. இதனால் கோபாலகிருஷ்ணன் மனம் உடைந்து காணப்பட்டார். கடந்த 31-ந் தேதி கோபால கிருஷ்ணன் வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடினார்.


உடனடியாக அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment