Friday, December 3, 2021

எட்டெழுத்து பெருமாள் கோவிலில் உள்ள கோசாலையில் ஊழியராக வேலை பார்த்த பெண் மின்சாரம் தாக்கி பலி

 தாழையூத்து அருகே உள்ள கரையிருப்பு பகுதியை சேர்ந்தவர் மாலைத் தேவர். இவரது மனைவி சீனியம்மாள் (வயது 70).


இவர் அருகன்குளத்தில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவிலில் உள்ள கோசாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இன்று காலை கோவில் கோசாலையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது அங்குள்ள மின்சார சுவிட்சை தொட்டதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அப்போது கோவிலுக்கு வந்த சின்னத்துரை என்ற வாலிபர் சீனியம்மாளை காப்பாற்ற முயன்றார். அவர் மீதும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

உடனே அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறிது நேரத்தில் சீனியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

சின்னத்துரைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment