Tuesday, May 3, 2022

தமிழக அரசு நடத்திய தொழில்நுட்ப போட்டியில் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரிக்கு ரூ.50 ஆயிரம் பரிசு

 தமிழக அரசு நடத்திய தொழில்நுட்ப போட்டியில் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரிக்கு ரூ.50 ஆயிரம் பரிசை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்


நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் மாணவ-மாணவிகள், இளைஞர்கள் மத்தியில் புதிய தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் 4 வகையான தொழில் நுட்ப போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் 12 குழுக்கள் பங்கு பெற்றன.

இதில் பங்கேற்ற நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி மாணவ-மாணவியர் சங்கர இசை செல்வம் (கம்ப்யூட்டர் சயின்ஸ்), விஜயதர்ஷினி, சண்முகலட்சுமி, மாளவிகா சாம் (சிவில்) அன்டோ ஜோயல், இஸ்மாயில் குழுவினர் வென்றனர். இதற்கான ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வழங்கி பாராட்டினார்.

பின்னர் கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-
 ‘ஸ்டார்ட்அப்’ என்ற புதிய தொழிலில் ஈடுபட விரும்பும் கல்லூரி மாணவ, மாணவிகளை  ஊக்குவிக்கும் வகையில் இந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரியை சார்ந்த அனைத்து துறை மாணவ-– மாணவிகளுக்கும் புது தொழில் தொடங்க தேவையான அனைத்து பயிற்சிகளும், வழி–காட்டுதலும் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த போட்டிக்கு ஊக்கமும், உற்சா–கமும் அளித்த பொது–மேலாளர்கள், கல்லூரி முதல்வர், துறை பேராசிரியர்கள், தொழில் முனைவோர் பயிற்சி இயக்குனர் மற்றும் பயிற்சி அளித்த மனோகர் (கம்ப்யூட்டர் சயின்ஸ்), சுமில்குமரன் (சிவில்) ஆகியோரை கல்லூரி நிறுவனர் கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.