Sunday, April 24, 2022

மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் வளாக தேர்வு நடைபெற்றது

 மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் வளாக தேர்வு நடைபெற்றது.

தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்ட காட்சி.
நெல்லை:

மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில்  சென்னை பான்யான் டெக்னாலஜி, டெக் மகேந்திரா, பானசோனிக் மற்றும் மதர்ஸன் ஆகிய நிறுவனங்களின் சார்பில் அனைத்து துறைகளின் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு தொழில்நுட்ப திறனறிவு தேர்வு  மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.

கல்லூரி முதல்வர் ஜின்னா ஷேக் முகம்மது தலைமை தாங்கினார். கலந்து கொண்ட நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு துறை அலுவலர்கள்  டெக் மகேந்திரா வினோத், பானசோனிக் முனுசாமி, மதர்ஸன் மீரான் முகைதீன் மற்றும் பான்யான் டெக்னாலஜி சலீம் ஆகியோர் கொண்ட  குழுவினர் நேர்முகத்தேர்வு மற்றும் தொழில்நுட்ப திறனறிவு தேர்வினை நடத்தினர்.

இறுதியாக 73 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமண ஆணைகள் மேற்படி நிறுவனங்களால் கல்லூரி முதல்வர் ஜின்னா ஷேக் முகம்மது முன்னிலையில் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கல்லூரி துறை தலைவர்கள் பிச்சம்மாள், சுப்புலெட்சுமி, அனுலா பியூட்டி, சுந்தர்ராஜன், டேரல் ஆல்பிரட், பர்வதவர்த்தினி, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் முகம்மது மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.