Friday, September 9, 2022

நெல்லையில் 727 புதிய பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

 நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் நெல்லை மாவட்டத்தில் ரூ.74 கோடியே 24 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 29 திட்டப்பணிகளை திறந்து வைத்தார். ரூ.156 கோடியே 28 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள 727 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்படி 

  1. நெல்லை மாநகராட்சி சார்பில் ரூ.53 கோடியே 61 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட மேடை போலீஸ் நிலையம், 
  2. மனக்காவலம்பிள்ளை ஆஸ்பத்திரி சாலையில் பல்நோக்கு கூட்டரங்கம்,
  3.  ராமையன்பட்டி பகுதியில் 5 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம், 
  4. நவீனமயமாக்கப்பட்ட வ.உ.சி.மைதானம், 
  5. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ.28 கோடி செலவில் பாளையங்கோட்டை, சேரன்மாதேவி, முக்கூடல், பாப்பாக்குடி ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடங்கள், 
  6. ஏர்வாடி, பத்மநேரி, முன்னீர்பள்ளம், மூைலக்கரைப்பட்டி ஆகிய இடங்களில் துணை வேளாண்மை விரிவாக்கம் இயக்க கட்டிடங்கள் ஆகியவை திறந்து வைக்கப்பட்டன.
  7. சட்டத்துறை சார்பில் ரூ.4 கோடி 70 லட்சம் செலவில் நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் 12 வகுப்பறைகள், 4 ஆசிரியர் அறைகள் மற்றும் கழிப்பறை கட்டிடங்கள், 
  8. பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.4 கோடியே 39 லட்சம் செலவில் வடக்கு செழியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடம், கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை மற்றும் ஆய்வு கட்டிடங்கள், 
  9. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் ரூ.1 கோடியே 90 லட்சம் செலவில் அங்கன்வாடி கட்டிடங்கள், வகுப்பறை மற்றும் ஆய்வக கட்டிடங்கள், ஊராட்சி ஒன்றிய கட்டிடங்கள்,
  10.  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய துறை சார்பில் ரூ.97 லட்சம் செலவில் அம்பை நகராட்சி ஆசிரியர் காலனியில் பூங்கா, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அகஸ்தியர்புரத்தில் பூங்கா, 
  11. செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ரூ.51 லட்சத்து 80 ஆயிரம் செலவில் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் நூலக கட்டிடம், 
  12. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் ரூ.15 லட்சம் செலவில் திருவேங்கடநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள சித்த மருத்துவமனை கட்டிடம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டது.


அடிக்கல் நாட்டினார்


நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.72 கோடியே 10 லட்சம் மதிப்பில் இருதயம், நரம்பு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவமனை கட்டிடம்,

 ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் ரூ.72 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை அலுவலக கட்டிடம், ஒன்றிய அலுவலக கட்டிடம், உயர்மட்ட பாலம், கலையரங்கங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், அங்கன்வாடி கட்டிடங்கள், ரேஷன் கடைகள், பள்ளி சமையலறை கட்டிடங்கள், சாலை பணிகள், குடிநீர் திட்ட பணிகள் உள்ளிட்ட 722 பணிகளுக்கும், 

அபிஷேகபட்டி கால்நடை பண்ணையில் ரூ.9 கோடியே 42 லட்சம் மதிப்பில் நாட்டுக்கோழி இனப்பெருக்க வளாகம் மற்றும் குஞ்சு பொறிப்பகம், ரூ.1 கோடியே 35 லட்சத்தில் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அகஸ்தியபுரம் பகுதியில் உள்ள தகனம் மேம்பாட்டு பணி மற்றும் களக்காடு நகராட்சி அலுவலகத்தில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி,

 பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பில் நெல்லை சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பாரதியார், வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் நினைவு நுழைவுவாயில் மற்றும் கலையரங்கம் கட்டும் பணிக்கும் என மொத்தம் ரூ.156 கோடியே 28 லட்சம் மதிப்பில் 727 பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.




நெல்லை மாவட்ட மக்களின் தேவைகளும், எதிா்பாா்ப்புகளும்!

 திருநெல்வேலி மாவட்டத்தில் அணைக்கட்டுகளைத் தூா்வாரும் பணி உள்பட பல்வேறு தேவைகளும், எதிா்பாா்ப்புகளும் உள்ளன. அவற்றை தீா்க்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனா்.


1790-ல் கிழக்கு இந்தியா கம்பெனியால் திருநெல்வேலி மாவட்டம் உருவாக்கப்பட்டு பின் பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆற்காடு நவாப்பிடமிருந்து 1801-ல் பிரிட்டிஷாா் இந்த நகரை கையகப்படுத்தி தின்னவேலி மாவட்டம் என பெயரிட்டனா். முதலில் திருநெல்வேலி நகரத்தை அடுத்து அமைந்துள்ள பாளைங்கோட்டையை தலைமையிடமாக கொண்டுதான் இந்த மாவட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பின் காலங்களில் திருநெல்வேலி நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டதாலும், திருநெல்வேலி சீமை என நாயக்கா் நவாப் காலங்களில் அழைக்கப்பட்டதாலும் இது தொடா்ந்து திருநெல்வேலி மாவட்டம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கடந்த 20-10-1986 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டமும், 12-11-2019 ஆம் தேதி தென்காசி மாவட்டமும் பிரிக்கப்பட்டன. இப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, சேரன்மகாதேவி ஆகிய வருவாய் கோட்டங்களும், 8 வட்டங்களும், 31 வருவாய் குறுவட்டங்கலும், 370 வருவாய் கிராமங்களும் உள்ளன.


நீா்வள மேம்பாடு: திருநெல்வேலி மாவட்டத்தின் அடையாளமாக தாமிரவருணி நதி திகழ்கிறது. இதில் கழிவுகள் கலப்பதை தடுக்கவும், நதி பாதுகாப்புக்கு சிறப்பு நிதி ஒதுக்கவும் வேண்டும். தாமிரவருணி நதி நீரை சேமிக்க கட்டப்பட்டுள்ள பாபநாசம் அணையைத் தூா் வார வேண்டும். மானூா் குளத்திற்கு சிற்றாறு தண்ணீா் தடையின்றி வந்து சேர ஆண்டுதோறும் தூா்வார வேண்டும். புதிதாக தாமிரவருணி நீரை கொண்டு செல்ல குழாய் திட்டங்களை ஆராய வேண்டும். வடக்கு மற்றும் தெற்கு கோடை மேழலகியான் உள்பட 7 கால்வாய்கள் உள்ளன. இவற்றில் கான்கிரீட் தளம் இல்லாததால் ஆண்டுதோறும் மராமத்துக்காக பல்லாயிரக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது. மேலும், கடைமடைக்கு தண்ணீா் செல்வதிலும் தடை ஏற்படுகிறது. கால்வாய்களில் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும்.


வேளாண்மையில் கவனம்: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களைப் போல தாமிரவருணி பாசன நீரைக் கொண்டு நெல் உற்பத்தியில் சிறக்கும் மாவட்டம் திருநெல்வேலி. அதுமட்டுமன்றி வாழை, கரும்பு, சிறுகிழங்கு, தானியவகைகளும் சாகுபடி செய்யப்படுகின்றன. மாங்காய் உற்பத்தியிலும் தனித்துவமான மாவட்டமாக உள்ளது. இம் மாவட்டத்திற்கு வேளாண்துறையின் இடா்பாடுகளாக அறுவடை இயந்திர தட்டுப்பாடு, அரசு கொள்முதல் நிலையங்கள் பற்றாக்குறையும் உள்ளது. இதுதவிர பாசன மடைகள் பராமரிப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படாததால் பல கிராமங்களில் பாசன நீா் விரயமாவது அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வட்டத்திற்கும் அரசு சாா்பில் தலா 10 நெல் அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்டவை வாடகை கட்டணத்திற்கு இயக்கினால் கூடுதல் நன்மை கிடைக்கும். ராதாபுரம், மானூா் வட்டங்களில் பிச்சி, மல்லிகை, கேந்தி பூக்கள் சாகுபடி அதிகமுள்ளது. பூக்களுக்கான குளிா்பதன கிட்டங்கி, களக்காட்டில் அரசு வாழை கொள்முதல் நிலையம் ஆகியவை நீண்டநாள் கோரிக்கையாகவே தொடா்ந்து வருகின்றன. பனைத்தொழிலில் ஆயிரக்கணக்கானோா் உள்ளனா். பதனீா் உற்பத்தியைப் பெருக்கவும், பனைஓலை உள்ளிட்டவற்றால் உருவாக்கப்படும் கைவினை பொருள் உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சுற்றுலாவுக்கு வழியில்லை: ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த குற்றாலத்தில் சுற்றுலாத்துறை மூலம் பல்வேறு பணிகள் செய்யப்பட்டன. இப்போது தென்காசி மாவட்டத்திற்கு சென்றுவிட்டதால் அகஸ்தியா் அருவி, பாபநாசம், உவரி, களக்காடு தலையணை, சீவலப்பேரி, சுத்தமல்லி அணைக்கட்டு பகுதிகளில் புதிதாக வளா்ச்சித்திட்டங்களை உருவாக்க வேண்டும். பாபநாசம் தலையணையில் மக்கள் அனுமதிக்கப்படாமல் பூட்டிக்கிடக்கிறது. அதனை திறந்து பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க வேண்டும். ஆண்டுதோறும் தண்ணீா் விழும் அகஸ்தியா் அருவியில் குளிக்க செல்வோருக்கு விதிக்கப்படும் அதிகளவிலான கட்டுப்பாடுகளைத் தவிா்க்க வேண்டும். ரோப் காா், சிறுவா் நீச்சல் குளம் ஆகியவற்றை உருவாக்கலாம். நவக்கைலாயம், நவத்திருப்பதி கோயில்களுக்கு அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆன்மிக சுற்றுலா தொகுப்பை போக்குவரத்துத்துறை மூலம் உருவாக்க வேண்டும். திருநெல்வேலி மாநகரில் சுற்றுலாவை மேம்படுத்த கூடுதல் திட்டங்களை வகுக்க வேண்டும்.


கல்வியில் கவனம்: திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் வளா்ச்சி அபரிமிதமாக உள்ளது. உயா்கல்வித்துறையில் கூடுதல் தேவைகள் உள்ளன. குறிப்பாக அரசின் செவிலியா் பயிற்சிக் கல்லூரி, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் சாா்பில் கீழநத்தம் பகுதியில் உள்ள பல்கலைக்கழக விளையாட்டு மைதானம், களக்காடு, நான்குனேரி, மூலைக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உறுப்புக்கல்லூரிகளை அமைக்க வேண்டும். பாளையங்கோட்டையில் நீண்டநாள் கோரிக்கையான சித்த மருத்துவ பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும். பி.காம்., பி.எஸ்சி. பாடப்பிரிவுகளில் கூடுதலான இடங்களை உருவாக்க வேண்டும். விளையாட்டு வீரா்களை அதிகரிக்கும் வகையில் விளையாட்டு விடுதிகளை அதிகரிக்க வேண்டும். பாா்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி உள்ள நிலையில், அவா்களுக்கான கல்லூரிக் கல்விக்கு இம் மாவட்டத்தில் வழியில்லை. ஆகவே, தென்மாவட்ட பாா்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவா்கள் பயன்பெறும் வகையில் திருநெல்வேலியில் சிறப்புக் கல்லூரி அமைக்க வேண்டும்.


தொழில் வளம் தேவை: திருநெல்வேலி மாவட்டத்தில் தொழில்வளத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட கங்கைகொண்டான் சிப்காட் வளாகம், நான்குனேரி தொழில்நுட்ப பூங்கா ஆகியவற்றால் உள்மாவட்டத்தினருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது குறைவாகவே உள்ளது. அதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும். பித்தளை பாத்திரங்கள், பத்தமடை பாய், மண்பாண்ட தொழில், வாழைநாா் பொருள் உற்பத்தி ஆகியவை சிறப்பாக உள்ளன. ஒருகாலத்தில் கொடிகட்டி பறந்த பேட்டை கூட்டுறவு நூற்பாலை கேட்பாரற்று கிடக்கிறது. அதை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். அவற்றிற்கு ஆன்லைன் சந்தைப்படுத்துதல், தடையற்ற மூலப்பொருள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இதுபோன்று பல்வேறு துறைகளிலும் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிா்பாா்க்கிறாா்கள்.


மழைக்கு உதிரும் சாலைகள்: திருநெல்வேலி மாநகரில் ஒவ்வொரு பருவழைக்கும் சாலைகள் உருக்குலைந்து போவது வாடிக்கையாக உள்ளது. இத்தகைய நிலை மாநகரின் வளா்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது. வீதிகள் தோறும் உள்ளாட்சித் துறை சாா்பில் சாலைகள் கான்கிரீட் தளமாக மேம்படுத்துப்பட்டு வருகிறது. ஆனால், நெடுஞ்சாலை துறை வசம் உள்ள பிரதான சாலைகள் அடிக்கடி சேதமுற்று வாகன போக்குவரத்தை கடினமாக்குகிறது. வாகனப் போக்குவரத்து மிகுந்த சாலைகளை முறையாக முல்லிங் செய்து தரமாக அமைத்தால் மழைதோறும் சாலைகளை செப்பனிட தேவையிருக்காது.

Monday, September 5, 2022

பிராங்க் போன் கால்.. "அந்த" பரபர வீடியோ.. கோவை 360 சேனலை தட்டி தூக்கிய போலீஸ்! ஆக்சன் எடுத்தது ஏன்?

 கோயம்புத்தூர்: "கோவை 360 டிகிரி' என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்தவர்கள் மீது கோவை மாநகர காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இவர்கள் வெளியிட்ட சில வீடியோக்கள்தான் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.


தமிழ்நாட்டில் தற்போது பிராங்க் கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. பொது இடங்களில் பல யூ டியூப் சேனல்கள் பிராங்க் செய்ய தொடங்கிவிட்டன.


அதிக வியூஸ் வரும் என்பதற்காக வித்தியாச வித்தியாசமாக பிராங்க் செய்து வருகின்றனர். சிலர் ஒருபடி மேலே போய் மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையிலும் பிராங்க் செய்கிறார்கள்.


பிராங்க் என்றால்.. திடீரென சாலையிலோ, பொது இடத்திலோ இருக்கும் ஒருவரிடம் ஏதாவது பேசி அவர்களை ஏமாற்றுவது. அல்லது கிண்டல் செய்வது, தொந்தரவு செய்வது.



பிராங்க்

கடைசியில் ஒரு எல்லை வரை அவர்களை தொல்லை செய்துவிட்டு, பின்னர் கேமரா இருக்கு பாருங்க என்று கூறி சமாதானம் செய்வது. இப்படி பிராங்க் செய்வதற்கு என்று தமிழ்நாட்டில் யூ டியூப் முழுக்க பல சேனல்கள் உருவாகி உள்ளன. இதற்கு முன்பே சென்னை உயர் நீதிமன்றம் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிராங்க் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில்தான் கோவையில் பொது இடங்களில் பிராங்க் செய்ய கூடாது. அப்படி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.




கோவை பிராங்க்

இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். சிறப்பு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்படும், என்று கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. கோவையில் இருந்து செயல்படும் யூ டியூப் சேனல்கள் இதற்காக கண்காணிக்கப்படும் என்றும் கோவை மாநகர காவல்துறை தெரிவித்தது. இந்த நிலையில்தான் கோவையில் இருந்து செயல்பட்டு வந்த கோவை 360 டிகிரி சேனல் நிர்வாகிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது . இது தொடர்பாக கோவை மாநகரக் காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது.




எச்சரிக்கை

அதில், கோவை மாநகர காவல் ஆணையர் .V.பாலகிருஷ்ணன், இ.கா.ப., உத்திரவின் பேரில் Prank Videos என்ற பெயரில் பெண்கள் மற்றும் முதியோர்களது சம்மதம் ஏதும் இன்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு அவர்களை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தும் வகையில், வீடியோக்கள் எடுப்பவர்கள் குறித்து கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் நிலைய போலீசார் கண்காணித்து வந்தது.



கோவை 360 டிகிரி

இந்த நிலையில், "கோவை 360 டிகிரி' என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்தவர்கள் மேற்கண்ட Prank Videos என்ற பெயரில் பொதுமக்களின் சம்மதம் இன்றி அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், உடல்ரீதியாகவும், மனரீதியாக துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டு அதை வீடியோ எடுத்து "கோவை 360 டிகரி" என்ற யூடியூப் சேனலில் வீடியா வெளியிட்டு உள்ளனர். இதை பார்த்து, அதன்பேரில் சைபர் க்ரைம் காவல் நிலைய குற்ற எண். 39/2022 U/s 354D IPC & 4 of TNPHW Act r/w 66E IT Act ன் படி "கோவை 360 டிகிரி" என்ற யூடியூப் சேனல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஆக்சன் ஏன்?

Prank Videos தொடர்பாக தேவையின்றி பொதுமக்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. கோவை 360 டிகிரி சேனலில் பொதுவாக பார்க்கில் இருக்கும் பெண்களிடம் பிராங்க் செய்யப்படும். இரண்டு ஆண்கள் பார்க்கில் உள்ள பெண்களிடம் சென்று அவர்களிடம் கிண்டலாக எதாவது பேசுவது போலவும், அவர்களின் பாடி கார்ட் போல செயல்படுவது போலவும் பிராங்க் செய்யப்பட்டது.






Prank Videos

அதேபோல் போனில் பேசும் பெண்களுக்கு அருகில் சென்று இளைஞர் ஒருவர் இன்னொரு போனில் பேசுவது போல் நடித்து, அந்த பெண் பேசுவதற்கு எல்லாம் பதில் சொல்லி கிண்டல் செய்வது போலவும் பிராங்க் செய்யப்பட்டது. மேலும் பெண்களிடம் கேள்வி கேட்டு அதற்கு பதில் இல்லை என்றால் கிஸ் மீ, ஸ்லாப் மீ என்ற செய்வது போலவும் பிராங்குகளை இந்த சேனல் செய்து வந்தது. இந்த வீடியோக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்தான் கோவை போலீசார் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.