Saturday, December 4, 2021

திருநெல்வேலி அருகே நிகழ்ந்த சோக சம்பவம்: சாலை விபத்தில் மருத்துவ மாணவிகள் உட்பட 3 பேர் பலி!

 ரெட்டியார்பட்டி அருகே, மதுரை நான்கு வழிச்சாலையில் நாகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரு சக்கரவாகனம் மீது மோதியது. இதில் அந்த இரு சக்கர வாகனத்தில் வந்த 3 மாணவிகள் தூக்கி வீசப்பட்டனர்.


திருநெல்வேலி அருகே நிகழ்ந்த சோக சம்பவம்:  சாலை விபத்தில் மருத்துவ மாணவிகள் உட்பட 3 பேர் பலி!



விபத்தில், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவிகள் திவ்ய காயத்ரி பொன்(21), பிரிடா ஏஞ்சலின் ராணி (23) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், கார் ஓட்டுநர் சண்முக சுந்தரம் என்பவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் படுகாயமடைந்த மாணவி பொன் திவ்ய காயத்ரி(21) 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த நெல்லை மாநகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவக்கல்லூரி மாணவிகள் மூவர் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இரு மாணவிகள் உயிரிழந்த சம்பவம் திருநெல்வேலியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment