Wednesday, December 1, 2021

மருதகுளம் தவறான சிகிச்சையால் இளைஞர் உயிரிழப்பு: மருத்துவர் மீது வழக்கு - செவிலியர் கைது!

 நெல்லை அருகே தவறான சிகிச்சையால் உயிரிழந்த சம்பவத்தில் செவிலியர் கைது செய்யப்பட்டார். சித்த மருத்துவர் உட்பட மூன்று பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.  


நெல்லை மாவட்டம் கோவை குளம் பகுதியை சேர்ந்தவர் மாரி  (23) இவர் கடந்த 2-ஆம் தேதி காய்ச்சலால் அவர்  பாதிக்கப்பட்ட நிலையில்  மருதகுளம் பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கில்  சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இடுப்பில் ஊசி போடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்த மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில்  மருந்துகள் கொடுக்கப் பட்டுள்ளது. இதனையடுத்து அன்றிரவு மாரிக்கு இடுப்பில் கடுமையான வலி ஏற்பட்டு  கால்   நடக்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிகிறது . 

இதனையடுத்து  மறுநாளும் அவர்  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மீண்டும் வேறு ஊசி போடப்பட்டு  மருந்துகள் கொடுக்கப்பட்டு அனுப்பியுள்ளனர். இருப்பினும் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகியதையடுத்து நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஊசி முறையாக செலுத்தாததால் நரம்பு மற்றும் ரத்த நாளங்கள் சேதமடைந்ததால் கால்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.  

மேலும் இடது காலில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சை செய்த பின்னரும் அவரது காலில் மீண்டும் இரத்த ஓட்டம்  சீராக வில்லை  இதன் காரணமாக  இடதுகாலை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என குடும்பத்தினரிடம்  அரசு மருத்துவர்கள் கூறியுள்ளார். இல்லையெனில் உயிருக்கு ஆபத்தாகி விடும்  என அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாரியை குடும்பத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர். 

அங்கும் இளைஞரின் காலை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் கடந்த 13ம் தேதி மாரியின் தந்தை பேச்சி மூன்றடைப்பு காவல் நிலையத்தில் மருத்துவமனை மீதும் மருத்துவர்கள் மீதும் புகார் மனு  அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மூன்றடைப்பு போலீசார் சித்த மருத்துவர் சக்தி,  மருத்துவ   மாணவர் அருண் செல்வம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் இதனிடையே  மீண்டும் மாரியை உறவினர்கள்  நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில்  கடந்த 28ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

இதனைத்தொடர்ந்து மாரியின் உறவினர்கள் அரசு மருத்துவமனை  முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கும் தவறான சிகிச்சை அளித்தது தொடர்பாக புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையிலான மருத்துவ குழுவினர் மருத குளத்தில் உள்ள மாரி சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனை இழுத்து மூடினர்.

அதனைத் தொடர்ந்து மூன்றடைப்பு காவல் நிலையத்தில் மாரியின் தந்தை அளித்த புகார் தொடர்பாக பதியப்பட்ட வழக்கு மரணத்தை ஏற்படுத்தும் விதமாக செயல்படுதல் (304) போலியாக மருத்துவர் என கூறி சிகிச்சை அளித்தல் 420 ,417 உள்ளிட்ட பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் ஊசி செலுத்திய செவிலியர் இசக்கியம்மாளை  கைது செய்ததோடு சித்த மருத்துவர் சக்தி மற்றும் அருண் செல்வம் ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment