Wednesday, April 1, 2015

தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்பு திட்டம்- தாமிரபரணி திட்டம்- அம்போ: 4 ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கிய ரூ.608 கோடி மாயம்

திருநெல்வேலி: தமிழகத்தின், முதல் நதிநீர் இணைப்புத் திட்டமான தாமிரபரணி திட்டம், நான்கு ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது.

தமிழகத்தின், முதல் நதிநீர் இணைப்பு திட்டம் என்ற பெயரோடு துவக்கப்பட்டது, தாமிரபரணி திட்டம். தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு - பச்சையாறு - கோரையாறு - எலுமிச்சையாறு என, ஒரே மாவட்டத்திற்குள், 73 கி.மீ., தூரத்திற்குள் ஆறு நதிகள் இணைக்கப்படுகின்றன. இதன்மூலம் நெல்லை, தூத்துக்குடியில், 6,840 ஏக்கர், தரிசு நிலம் பாசன வசதி பெறும்; 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும். 

* கடந்த தி.மு.க., ஆட்சியில், 2009 பிப்., 21ம் தேதி, 369 கோடி ரூபாய் திட்டமதிப்பில் பணி துவங்கியது.
* உடனடியாக, 213 கோடி ரூபாய் ஒதுக்கீடும் செய்யப்பட்டது. 
* கல்லிடைக்குறிச்சி, வெள்ளங்குழியில் தடுப்பணை கட்டப்பட்டது. 
@ணஞுதுtஞிணிடூதட்ண@ * திடியூர், மூலைக்கரைப்பட்டி, காரியாண்டி வழியாக, ராதாபுரம், எம்.எல்.தேரி குளத்திற்கு தண்ணீரை கொண்டு செல்ல, 73 கி.மீ., தூரத்திற்கு, கால்வாய் பணி துவங்கியது.
* வெள்ளங்குழி முதல், மூலைக்கரைப்பட்டி வரையிலும், 35 கி.மீ., தூரத்திற்கு, 213 கோடி ரூபாயில் கால்வாய் பணி முடிந்து விட்டது. 
* கடந்த 2011ல், அ.தி.மு.க., ஆட்சி வந்தபின், ஒரு பைசா கூட நிதி ஒதுக்கப்படவில்லை. திட்டத்தின் இரண்டாவது பாதியான, மூலைக்கரைப்பட்டியில் துவங்கி, காரியாண்டி, எம்.எல்.தேரி வரையிலான, 35 கி.மீ., தூரத்திற்கு, இன்னமும் கால்வாய் வெட்டப்படவில்லை. அ.தி.மு.க., அரசு வந்த வேகத்தில் முடித்திருந்தால், 2014க்குள் பணி முடிந்திருக்கும். ஆண்டுதோறும் மழையின் போதும், தாமிரபரணியில், 13 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. ஆனால், இந்த திட்டத்தின் மூலம், அந்த பகுதி மக்களுக்கு பகிர்ந்தளிப்பதோ, வெறும், மூன்று டி.எம்.சி., தண்ணீர் தான். 
@ணஞுதுtஞிணிடூதட்ண@ அ.தி.மு.க., அரசு, 2011ல் பொறுப்பேற்ற உடன்,
* 2011 - 12 பட்ஜெட்டில், தாமிரபரணிக்கு, 90 கோடி; காவிரி இணைப்பிற்கு, 93 கோடி ரூபாய்.* 2012 - 13ல், தாமிரபரணிக்கு, 100 கோடி; காவிரிக்கு, 50 கோடி ரூபாய்.
* 2013 - 14ல், 156.44 கோடி ரூபாய்.
*2014 - 15ல், 119.98 கோடி ரூபாய். 
* தற்போதைய, 2015 - 16 பட்ஜெட்டில், 253 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிதி முழுமையாக வந்தாலே, தாமிரபரணி திட்டத்தை எப்போதோ முடித்திருக்கலாம். மேலும், 2009ல்,தி.மு.க., துவக்கிய போது திட்ட மதிப்பீடு, 369 கோடி தான். ஆனால், தற்போது செலவு உயர்ந்துள்ள சூழலில், மறுமதிப்பீட்டின் மதிப்பு, 959 கோடி ரூபாயாகும். 
எனவே, இந்த திட்டத்தை இப்போது செயல்படுத்தாவிட்டால், இனி எப்போதும் செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதுவரை செலவழித்துள்ள, 213 கோடி ரூபாய், மக்கள் வரிப்பணமும் வீண் தான். கடந்த நான்கு ஆண்டு பட்ஜெட்டில், நதிநீர் திட்டங்களுக்காக தமிழக அரசு, 608 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக கூறுகிறது. அந்த நிதியோடு, தற்போது ஒதுக்கியுள்ள, 253 கோடி ரூபாயும் மாயமாகும் என்றே தெரிகிறது. 

Source : Dinamalar.comhttp://www.dinamalar.com/news_detail.asp?id=1220073

No comments:

Post a Comment